Tamilnadu
"நீங்கள் இருக்கும் மனநிலையில்தான், நானும் இருக்கிறேன் என்றார் முதலமைச்சர்" - அற்புதம்மாள் பேட்டி!
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பது தொடர்பாக நிச்சயம் முடிந்ததை செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புத்தமாள் முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், “பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து 30 நாட்கள் பரோல் அளித்தார் முதலமைச்சர். அதற்கு நன்றி தெரிவித்தேன்.
பேரறிவாளனின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, தொடர்ந்து சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், பரோல் நீட்டிப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்தேன்.
நீங்கள் இருக்கும் மனநிலையில்தான், நானும் இருக்கிறேன் என்றார் முதலமைச்சர். நிச்சயம் முடிந்ததைச் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!
-
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டி கொலை : கம்மல் கொள்ளை - நாகர்கோவில் அருகே கொடூரம்!
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்