Tamilnadu
“உணவின்றி தவிக்கும் தெருவோர வாசிகளுக்கு சொந்த செலவில் உணவு வழங்கிய பெண் காவலர்” : குவியும் பாராட்டு!
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்துள்ள தெருவோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு கிடைக்கத் தமிழக அரசும், தன்னார்வலர்களும் பல்வேறு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி என்பவர் திருவாரூர் பெரிய கோவில், கமலாலய குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தனது சொந்த செலவில் தனது குடும்பத்தினருடன் இனைந்து மதிய உணவு வழங்கினார்.
காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமெனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி காவல்துறை சீருடை அணியாமல், காவலர்கள் பாதுகாப்பு பந்தோபஸ்து இல்லாமல், தனியாக தனது குடும்பத்தினருடன் சாதாரண மக்களைப் போல ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் கயல்விழியை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!