Tamilnadu
3 டன் எடையில் சென்னை வந்தது O2 கருவிகள், RTPCR கிட்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் - துரிதமாகும் தடுப்பு பணிகள்!
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தளா்வுகளற்ற முழு ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஆக்ஜிசன், வெண்டிலேட்டா் மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளி நாடுகளிலிலுருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் தமிழகத்திற்கு பெருமளவு வரவழைத்து வருகிறது.
தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ்சே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக முதலமைச்சா் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப்படை விமானங்களும் துணை செய்கின்றன. டெல்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்கள் 3 டன் மருத்துவ உபகரணங்களுடன் சென்னை பழைய விமானநிலையம் வந்தன.
இரு விமானங்களிலும் 68 ஆக்ஜிசன் உற்பத்தி கருவிகள், 45 வெண்டிலேட்டா்கள், 2 லட்சம் முகக்கவசங்கள், ஒரு லட்சம் கொரோனா பரிசோதனை RT-PCR Kits மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்திறங்கின.
அதன் பின்பு விமானப்படை வீரா்கள் கண்காணிப்பில், இந்தியன் ஏா்லைன்ஸ் லோடா்கள் மருத்துவ உபகரணங்களை இறக்கி சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கொடுத்தனா். அவா்கள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அதன்பின்பு தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அடுத்த சில தினங்களில் மேலும் சில விமானங்களில் டில்லி, நாக்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு தமிழகம் வரவிருப்பதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
Also Read
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!