Tamilnadu
“கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்... மருந்திலும் மோசடி செய்யும் மனிதர்கள்” - சுகாதாரத்துறை செயலர் வார்னிங்!
சென்னை தாம்பரம் அருகே கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை திருவண்ணாமலையில் இருந்து வாங்கி வந்து அதிக விலைக்கு விற்க முயன்ற மருத்துவர் முகமது இம்ரான் நேற்று கைது செய்யப்பட்டார்.
குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரிடமிருந்து ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
4700 ரூபாய்க்கு திருவண்ணாமலையில் விக்னேஷ் என்பவரிடம் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வந்து, அதனை சுமார் 20,000 ரூபாய்க்கு விற்க முயன்றபோது மருத்துவர் இம்ரான் போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் இம்ரானுடன் வந்த மேடவாக்கத்தை சேர்ந்த விஜய் (29) மற்றும் திருத்தணியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ருவண்ணாமலை அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் விக்னேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவர் சச்சின் என்பவர் உள்ளிட்ட நபர்களை தேடிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தாம்பரத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நேற்று எங்களுக்கு புகார் வந்தது. அங்கு சோதனை நடத்தி 17 'வயல்' ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தோம். இப்படி கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்பவர்களுக்கு கடைசி 'வார்னிங்'.
அனைத்து ஆவணங்களுடன் ஏழை, எளிய மக்களுக்கு கே.எம்.சி மருத்துவமனையில் கொடுக்கக்கூடிய ரெம்டெசிவிர் மருந்துகளும் வெளியே போகிறது. குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும் மருந்துகளை கொண்டு வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!