Tamilnadu
ஒரே பதிவு எண்ணில் இரண்டு கார்கள்... கைவரிசை காட்டிய கும்பல் - அதிர்ந்துபோன போக்குவரத்து அதிகாரிகள்!
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த உமாபதி என்பவரின் இன்னோவா காரை வாங்கியுள்ளனர். பின்னர் காரின் உரிமையாளர் பெயரை மாற்றுவதற்காக முத்துக்குமார் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது காரின் ஆவணங்களைப் பரிசோதித்த அலுவலர்கள், இந்த கார் வேறு ஒருவர் பெயரில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேறு ஒரு இன்னோவா கார் இதே பதிவு எண்ணோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தது. இந்த இரண்டு கார்களிலும் ஒரே எண் இருப்பதைக் கண்ட அதிகாரிகளுக்குக் குழப்பமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், போக்குவரத்து அதிகாரிகள் இரண்டாவதாக வந்த காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுரையைச் சேர்ந்த இடைத்தரகர் மூலம் தூத்துக்குடியில் இந்த காரை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு இன்னோவா கார்களின் ஆவணங்களும் ஒரேமாதிரியாக இருந்துள்ளன. இதையடுத்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் போலி எண்களில் கார் விற்பனை செய்யும் கும்பல் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!
-
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!
-
பாஜக அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOutதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!