Tamilnadu
“பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 3 பேர் கைது”: கடைசி நேரத்திலும் திருந்தாத எடப்பாடி அரசு!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அன்பழகன் தலைமையிலான பறக்கும் படையினர் திண்டிவனம் ஜெயபுரம் ரவுண்டானா அருகே வந்த காரை மடக்கி நிறுத்தி சோதனை செய்ததில் பறக்கும் படையினரை பார்த்து காரிலிருந்து இறங்கி இருவர் தப்பிச் செல்ல முயன்றனர்.
அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் ஒரு லட்சம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் திண்டிவனம் காவல் நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை செய்ததில் தென்பசார் பகுதியை சேர்ந்த மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க பொருளாளர் ராம்குமார், அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சிங்கனூரை சேர்ந்த சேகர் என தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்கள் 3 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !