Tamilnadu
“பணப்பட்டுவாடா செய்வதில் தகராறு” : பா.ஜ.க மாவட்ட தலைவரை அரிவாளால் வெட்டு முயன்ற அ.தி.மு.க நிர்வாகி !
தேனி மாவட்டம் போடித் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் அ.தி.மு.க தேர்தல் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு காரியாலயத்தில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் இருந்தனர். மதுரை வந்த மோடி கூட்டத்திற்கு ஆட்களை கூட்டிச் செல்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பழனிசெட்டிபட்டி முன்னாள் அ.தி.மு.க பேரூர் செயலாளர் முருகேசன் தேர்தல் காரியாலயத்திற்கு வந்து பா.ஜ.கவை சேர்ந்த மனோகரனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென அ.தி.மு.க முன்னாள் செயலாளர் முருகேசன், பா.ஜ.கவை சேர்ந்த மனோகரனை அரிவாளால் வெட்ட முயன்றார்.
இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் தடுத்து இருவரையும் சமாதானப்படுத்தினர். மோடிக்கு ஆட்களை கூட்டிச்செல்வதற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் போடித் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளுக்கிடையே அரிவாள் வெட்டு வரை சென்றுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க கட்சிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !