Tamilnadu
“பணப்பட்டுவாடா செய்வதில் தகராறு” : பா.ஜ.க மாவட்ட தலைவரை அரிவாளால் வெட்டு முயன்ற அ.தி.மு.க நிர்வாகி !
தேனி மாவட்டம் போடித் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் அ.தி.மு.க தேர்தல் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு காரியாலயத்தில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் இருந்தனர். மதுரை வந்த மோடி கூட்டத்திற்கு ஆட்களை கூட்டிச் செல்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பழனிசெட்டிபட்டி முன்னாள் அ.தி.மு.க பேரூர் செயலாளர் முருகேசன் தேர்தல் காரியாலயத்திற்கு வந்து பா.ஜ.கவை சேர்ந்த மனோகரனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென அ.தி.மு.க முன்னாள் செயலாளர் முருகேசன், பா.ஜ.கவை சேர்ந்த மனோகரனை அரிவாளால் வெட்ட முயன்றார்.
இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் தடுத்து இருவரையும் சமாதானப்படுத்தினர். மோடிக்கு ஆட்களை கூட்டிச்செல்வதற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் போடித் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளுக்கிடையே அரிவாள் வெட்டு வரை சென்றுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பா.ஜ.க கட்சிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர் : திருச்சி IG இல்லம் அருகே நடந்த அதிர்ச்சி!
-
“மாயாஜாலம் வளர்ச்சியைத் தராது” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !