Tamilnadu
சாப்பிட்டுக் கொண்டிருந்த பரோட்டாவை எடுத்ததால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை : கோவையில் கொடூரம்!
கோவை மாவட்டம், தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையங்கிரி. இவர் இந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றார். இதே சூளையில் ஜெயக்குமார் என்பவர் வேலை செய்கிறார். இந்நிலையில், திங்கட்கிழமை இரவு ஜெயக்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சூளைக்கு வந்துள்ளார்.
அப்போது, சூளை பகுதியிலிருந்த ஒரு அறையில், வெள்ளையங்கிரி பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஜெயக்குமார், வெள்ளையங்கிரி சாப்பிட்டுக் கொண்டிருந்த பரோட்டாவில், கை வைத்து எடுத்து சாப்பிட்டுள்ளார். அதற்கு வெள்ளையங்கிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மதுபோதையில் இருந்த ஜெயக்குமார் வெள்ளையங்கிரியின் குடும்பத்தைப் பற்றி ஆபாசமாகப் பேசி செங்கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெள்ளையங்கிரி அங்கிருந்த உருட்டுக் கட்டையால் ஜெயக்குமாரை கடுமையாகத் தாக்கினார். இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த தடாகம் போலிஸார் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வெள்ளையங்கிரியை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சாப்பிட்டுக் கொண்டிருந்த பரோட்டாவில் கை வைத்து எடுத்ததால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!