Tamilnadu
“எனது பேட்டி திரிக்கப்பட்டுள்ளது” : தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் !
“சிவகாசி பகுதியில் நடைபெற்று வரும் பட்டாசு விபத்துகளை தடுக்க, அப்பகுதி மக்களுக்கென மாற்றுத் தொழிற்சாலைகளை அரசு உருவாக்கி, வேலைவாய்ப்பினை உருவாக்கினால் இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம்” என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூரில், செய்தியாளர்கள் என்னை சந்தித்த போது "சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு விபத்தின் விளைவாக பலர் இறந்திருக்கிறார்களே?" என்ற கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.
அதற்கு நான், "சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள். இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், அரசு, அம்மக்களுக்கென மாற்று தொழிற்சாலைகளை அந்த பகுதியிலே உருவாக்கி, அவர்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பினை உருவாக்கினால், காலப்போக்கில் இத்தகைய விபத்துகளை தடுக்கலாம். காலப்போக்கில் பட்டாசு தொழிற்சாலைகளும் மூடப்படலாம்” என்று நான் தெரிவித்தேன்.
ஆனால், சில பத்திரிகையாளர்கள், எனது பேட்டியை திரித்தும் - மாற்றியும் வெளியிட்டிருப்பதால், சிவகாசி பகுதி மக்களிடையே ஒரு தவறான எண்ணம் உருவாக்கப்பட்டிருப்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கான விளக்கமே இது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!