Tamilnadu
மதராஸ் மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என்று பேரறிஞர் அண்ணா பெயர் மாற்றத்தை அறிவித்த தினம் இன்று!
மதராஸ் மாநிலத்தை “தமிழ்நாடு” என்று முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் மாற்றத்தை அறிவித்த தினம் இன்று. விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாநிலத்தை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி 75 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பலசலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது.
சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம்., பேரறிஞர் அண்ணாத்துரை, பெருந்தலைவர் காமராசர், தோழர் ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சங்கரலிங்கனார் தொடர்ந்து உண்ணாவிரமிருந்து 13 அக்டோபர் 1956 ல் உயிர் துறந்தார்.
1967 ஜூலை 18ல் மதராஸ் மாநிலத்தை ‘தமிழ்நாடு’ஆகப் பெயர்மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 23.11.1967ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இதையடுத்து 14.01.1969ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது சங்கரலிங்கனாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !