Tamilnadu
“விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்குகிறோம்.. முதல்வர் பதில் சொல்வாரா?” - பி.ஆர்.பாண்டியன் கேள்வி!
தமிழக முதலமைச்சர் தன்னுடைய சுய லாபத்திற்காக வேளாண் சட்டத்தை ஆதரிப்பதாகவும், ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரணாகச் செயல்படுகிறார் என்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அனைத்து விவசாயகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த வேளாண் சட்டத்தினை திரும்பப் பெறும் வரை இந்தியாவில் போராட்டம் ஓயாது என தெரிவித்த அவர், இதனை ஆளுநரிடம் கோரிக்கையாக கேட்கிறோம், அந்த கோரிக்கை மனுவை ஆளுநரிடம் கொடுக்க இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும், டெல்லியில் போராட்டம் நடைபெற்று 24 நாட்கள் கடந்து விட்டது. அரசு இதுகுறித்துப் பேச மறுக்கிறது. உச்சநீதிமன்றம் சொல்வதை கேட்க மறுக்கிறது. விவசாய குடும்பங்கள் வீதியில் நின்று போராடுவதாக வேதனை தெரிவித்த அவர், தமிழக முதல்வர் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு அளித்து மறைந்த ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரண்பாடாகச் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் முதலமைச்சர் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார். பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். இதில் உள்ள பாதிப்புகளை நாங்கள் விளக்கி கூற இருக்கிறோம். இன்று மாலைக்குள் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Also Read
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“வெல்வோம் உடன்பிறப்புகளே... 2026 தேர்தல் களம் நம்மை அழைக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
”பொய் சொல்லி போராட்டம் நடத்தும் பழனிசாமி... இருப்பை காட்டிக்கொள்ள நாடகம்!”: முரசொலி விமர்சனம்!