Tamilnadu
“இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள், முதுகெலும்புள்ள தலைவர் முதல்வராக வருவார்” : திருச்சி சிவா எம்.பி பேச்சு!
மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இந்த உண்ணவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ(எம்) சி.பி.ஐ, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்த உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பங்கேற்றுள்ள கட்சி நிர்வாகிகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், “நடுங்கும் குளிரில் போராட்டத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், விவசாயமும் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது. இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள், முதுகெலும்புள்ள தலைவர் முதல்வராக வருவார். நீட், குடியுரிமை சட்டம், விவசாயம் என எதிரான சட்டங்கள் அனைத்தும் எதிர்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!