Tamilnadu
கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு : அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு!
ஆந்திர மாநிலம் அம்மபள்ளி அணையிலிருந்து வினாடிக்கு 1400 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் முத்துகொண்டாபுரத்தில் உள்ள தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், திருவாலங்காடு, காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, இராசபாளையம் காரணி நிஜாம்பட்டு, உள்ளிட்ட உள்ளிட்ட 30 கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
கனகம்மாசத்திரத்தில் தான் அரசு மருத்து வமனை, காவல் நிலையம், காய்கறி மார்கெட் என அனைத்து கடைகளும் உள்ளதால் அப்பகுதிக்கு வரவேண்டிய 30 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி வரும் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார். காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !