Tamilnadu
பேய் விரட்டுவதாகச் சொல்லி 2 சிறுமிகளுக்கு வன்கொடுமை... நாமக்கல்லில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பறவைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் 1 மகன் உள்ளனர். 13 மற்றும் 15 வயதில் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 2 சிறுமிகளும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் 2 சிறுமிகளையும் மங்களபுரம் பகுதியிலுள்ள பூசாரி சேகர் என்பரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது 2 சிறுமிகளையும் வீட்டிற்குள் அழைத்துச்சென்று மாறி மாறி 1 வாரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதுபற்றி பெற்றோர்களிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அஞ்சிய 2 சிறுமிகளும் பயத்துடனே நடந்தது பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மங்களபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சேகர் என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?