Tamilnadu
பேய் விரட்டுவதாகச் சொல்லி 2 சிறுமிகளுக்கு வன்கொடுமை... நாமக்கல்லில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பறவைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் 1 மகன் உள்ளனர். 13 மற்றும் 15 வயதில் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 2 சிறுமிகளும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் 2 சிறுமிகளையும் மங்களபுரம் பகுதியிலுள்ள பூசாரி சேகர் என்பரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது 2 சிறுமிகளையும் வீட்டிற்குள் அழைத்துச்சென்று மாறி மாறி 1 வாரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதுபற்றி பெற்றோர்களிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அஞ்சிய 2 சிறுமிகளும் பயத்துடனே நடந்தது பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மங்களபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சேகர் என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!