Tamilnadu
பேய் விரட்டுவதாகச் சொல்லி 2 சிறுமிகளுக்கு வன்கொடுமை... நாமக்கல்லில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பறவைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் 1 மகன் உள்ளனர். 13 மற்றும் 15 வயதில் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 2 சிறுமிகளும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் 2 சிறுமிகளையும் மங்களபுரம் பகுதியிலுள்ள பூசாரி சேகர் என்பரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது 2 சிறுமிகளையும் வீட்டிற்குள் அழைத்துச்சென்று மாறி மாறி 1 வாரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதுபற்றி பெற்றோர்களிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அஞ்சிய 2 சிறுமிகளும் பயத்துடனே நடந்தது பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மங்களபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சேகர் என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!