Tamilnadu
பேய் விரட்டுவதாகச் சொல்லி 2 சிறுமிகளுக்கு வன்கொடுமை... நாமக்கல்லில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பறவைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி கோவிந்தம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் 1 மகன் உள்ளனர். 13 மற்றும் 15 வயதில் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 2 சிறுமிகளும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் 2 சிறுமிகளையும் மங்களபுரம் பகுதியிலுள்ள பூசாரி சேகர் என்பரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது 2 சிறுமிகளையும் வீட்டிற்குள் அழைத்துச்சென்று மாறி மாறி 1 வாரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதுபற்றி பெற்றோர்களிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அஞ்சிய 2 சிறுமிகளும் பயத்துடனே நடந்தது பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மங்களபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சேகர் என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?