Tamilnadu
நீலகிரி தோடர் பழங்குடியின மக்கள் நடத்திய பாரம்பரிய திருமணம் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !
நீலகிரி மண்ணின் மைந்தர்களான தோடர் பழங்குடியினர் மக்கள் நடத்திய பாரம்பரிய திருமணத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வாழும் தோடர் பழங்குடியினர் மக்கள் தங்களுக்கு என தனி பாராம்பரியம், கலாச்சாரம், தனிமொழி என பல நூற்றாண்டு காலமாக நீலகிரி மலைத்தொடரில் இயற்கையோடு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் திருமணம் முற்றிலும் இயற்கையோடு இயற்கையாக கலந்திருக்கும். அவர்களின் மொழியில் ஆடல் பாடல் என கலாச்சாரத்துடன் நடைபெறுவது வழக்கம்.
அவ்வாறு தோடர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த தி.மு.க மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளரும் நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவருமான பொன்தோஸ் அவர்களின் மகன் விவேக் - ஆர்த்தி ஆகியோரது மணவிழா கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு வனப்பகுதியில் இயற்கையோடு இயற்கையாக, கலாச்சாரம் மாறாமல் நடைபெற்றதை மகிழ்ச்சி அடைவதாகவும், மணமக்கள் எல்லா நலனும் பெற்று நல் வாழ்வு வாழ்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து கடிதம் தொடர் பழங்குடியினர் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தோடர் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!