Tamilnadu
“கஷ்டப்பட்டு விளைய வெச்ச தேயிலையை வாங்க மறுக்கும் தொழிற்சாலைகள்”: தவிப்பில் வாடும் கோத்தகிரி விவசாயிகள் !
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் ஒன்று தேயிலை தொழில் மற்றும் சுற்றுலாவை சார்ந்ததாகும். நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு ஏக்கர் அரை ஏக்கர் என 55 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் பசுந்தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பசுந்தேயிலை விலை உச்சத்தை எட்டியுள்ளது. தரம் வாய்ந்த முதல் தரம் பசுந்தேயிலை 36 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சாதாரண ரகம் 27 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கூக்கல்தொரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தேயிலை தொழிற்சாலை நிர்வாகங்கள், சிறு குறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கு தேயிலை வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
இதனால், கடந்த 10 -நாட்களாக விவசாயிகளிடமிருந்து பசுந்தேயிலையை கொள்முதல் செய்யாமல், எவ்வித அறிவிப்பும் இன்றி தொழிற்சாலையை மூடி உள்ளனர். இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு பசுந்தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தேயிலை விவசாய சங்க பிரதிநிதிகள் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்காததால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தங்களின் கிராமங்களில் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!