Tamilnadu
சென்னையில் 991, கோவையில் 498 பேருக்கு கொரோனா.. ஒரெ நாளில் 53 பேர் பலி.. தமிழகத்தின் இன்றைய #CoronaUpdates
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேலும் 5 ஆயிரத்து 799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இருப்பினும் புதிதாக 78 ஆயிரத்து 190 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 ஆயிரத்து 752 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இதுகாறும், 5 லட்சத்து 8,511 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், சென்னையில் 991, கோவையில் 498, செங்கல்பட்டில் 364, சேலத்தில் 297, கடலூரில் 296, திருவள்ளூரில் 294, திருவண்ணாமலையில் 222 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே மேலும் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆகவே சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,992 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 8,434 கொரோனா பலிகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. இதையடுத்து தற்போது 46 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
குதிரை பேரத்தில் ஈடுபட்ட விஜய் அரசின் மூக்கு அறுபட்டது; கிரிமினல்கள் நிரம்பிய கேபினட்: இ.பரந்தாமன் பேட்டி
-
“தறிகெட்டு அராஜகம் செய்யும் த.வெ.க.வினர்...” - பட்டியலிட்டு Part 2-வை வெளியிட்ட முரசொலி!
-
Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது : அனிதா ராதாகிருஷ்ணன் கைது - எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!
-
“வைகை மீது ஆளுநருக்கு என்ன திடீர் அக்கறை.. தமிழ்நாடு அரசே விழித்துக்கொள்” : கி.வீரமணி எச்சரிக்கை!
-
“கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட்” : ஆர்.எஸ்.பாரதி அதிரடி - முழு பேட்டி இங்கே!