Tamilnadu
சென்னை மெரினாவில் கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திடுக - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென அளவுக்கு அதிகமான நுரை உருவானது. அது காற்றில் பரந்து கடற்கரை முழுதும் பரவியது.
இது குறித்த பி.பி.சி செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதனையடுத்து தேசிய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழு கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
அதில், நெசப்பாக்கத்தில் உள்ள சென்னை மெட்ரோ நீர், அடையாறு மற்றும் கூவம் ஆகிய ஆறுகளில் கலக்கும் கழிவுநீர் மெரினா அருகே கடலில் கலப்பதால் நுரைகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மெரினா கடற்கறைய ஒட்டிய கடல் பகுதியில் கழிவுநீர் எங்கிருந்து கலக்கிறது என்பதைக் கண்டறிந்து, மாசு ஏற்படுவதைத் தடுக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !