Tamilnadu
சென்னை மெரினாவில் கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திடுக - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென அளவுக்கு அதிகமான நுரை உருவானது. அது காற்றில் பரந்து கடற்கரை முழுதும் பரவியது.
இது குறித்த பி.பி.சி செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதனையடுத்து தேசிய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழு கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
அதில், நெசப்பாக்கத்தில் உள்ள சென்னை மெட்ரோ நீர், அடையாறு மற்றும் கூவம் ஆகிய ஆறுகளில் கலக்கும் கழிவுநீர் மெரினா அருகே கடலில் கலப்பதால் நுரைகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மெரினா கடற்கறைய ஒட்டிய கடல் பகுதியில் கழிவுநீர் எங்கிருந்து கலக்கிறது என்பதைக் கண்டறிந்து, மாசு ஏற்படுவதைத் தடுக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?