Tamilnadu
ஆசிரியர்களிடம் மத்திய அரசே கருத்து கேட்பதா? இது மாநில உரிமையை பறிக்கும் செயல் - ஆசிரியர் சங்கம் கண்டனம்
மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை செயலாளர் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளருக்கும் கடந்த 24ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார். அதில் வரும் 31ம் தேதிக்குள்ளாக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் தேசிய கல்விக்கொள்கை குறித்து கருத்துகளை இணைய தளம் மூலமாக தெரிவிக்கவேண்டும் என்று அறிவிக்கபட்டிருந்தது.
இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்.
அதில், “கொடிய கொரோனா தொற்றுகாலத்தில் மனித உயிர்கள் மடிந்து கொண்டிருக்கும் காலத்தில் அவசர அவசரமாக தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு துடிப்பது ஏன்? மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயல்வதை ஏற்க இயலாது.
மத்திய அரசு நேரிடையாக மாநில அரசின் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது என்பது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும். வருங்கால தலைமுறை, நாட்டு நலன் சார்ந்த தேசிய கல்விக்கொள்கை அவசர அவசரமாக ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது என்பது ஏதோ நடைமுறைக்காக கேட்பதுபோல் தோன்றுகிறது.
மேலும் இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே இந்த கல்விக்கொள்கை வெளியிடப்பட்ட நிலையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் வெளியிடாத நிலையில் மீண்டும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது கண்டனத்துகுறியது.
இதற்கு தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு தேசிய கல்விக்கொள்கை 2020 சார்ந்த தமிழக அரசின் நிலைப்பட்டினை உடனடியாக தெரிவிக்கவேண்டும். பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ள தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்கவேண்டும்.
ஒருவேளை மத்திய அரசு இதே வடிவில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி வீதிக்கு வந்து போராடுவோம். தமிழக முமுவதும் பெரும்பான்மையான ஆசிரியர்களை ஒன்றுதிரட்டி தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட முன்னெடுப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் கூறியுள்ளார்.
Also Read
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
-
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!