Tamilnadu
“வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசக் கூடாது!?” - பொது மேலாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையின் பொது மேலாளராக சஞ்சய் வாக்லூ என்பவர் பணியாற்றி வருகிறார்.
வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று காலத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை ஆலை நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளனர்.
இதுகுறித்துப் பேச, நேற்று மாலை சி.எஃப்.எல்.யூ., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பொது மேலாளர் அறைக்குச் சென்றுள்ளனர். தங்களது கோரிக்கைகள் குறித்து தமிழில் பேசத் தொடங்கியுள்ளனர்.
அப்போது குறுக்கிட்ட பொது மேலாளர் சஞ்சய் வாக்லூ, “இங்கு தமிழில் பேசக்கூடாது, ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுங்கள். தமிழில் யாராவது பேசினால் நான் எழுந்து வெளியே சென்றுவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து தமிழில் பேசியதையடுத்து பொது மேலாளர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த தொழிற்சங்கத்தினர் இன்று தொழிற்சாலை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெடி மருந்து தொழிற்சாலையின் பொது மேலாளர் மன்னிப்புக் கேட்கும் வரை அனைத்து தொழிற்சங்கங்கள், குன்னூரிலுள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!