Tamilnadu
“கொரோனா பீதி.. குறைந்த ஊதியம்” : பணியில் சேராத ஒப்பந்த செவிலியர்கள் - செய்வதறியாது திணறும் சுகாதாரத்துறை!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் பணியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளதால், கூடுதலாக ஒப்பந்த முறையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேலான செவிலியர்களை தமிழக அரசு நியமித்தது.
ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் பணியில் சேராமலேயே உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு பணியில் சேர அழைப்பு விடுத்தும் சேரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், ஏற்கெனவே 18 ஆயிரத்துக்கும் மேலான செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மற்ற செவிலியர்களைப் போன்றே பணிகள் வழங்கப்பட்டாலும் ஊதியம் என்னவோ வெறும் 14 ஆயிரம் ரூபாயாக மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரைப் பணயம் வைத்து இந்த கொரோனா காலத்தில் பணியில் ஈடுபடுகிறோம். இடைவேளையே இல்லாத பணியும் செய்து ஊதியமும் குறைவாகப் பெற்றுக்கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் எவ்வாறு சேர முடியும் என்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில் மட்டுமே 150க்கும் மேலான செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்களும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளிலேயே பணியமர்த்தப்படுகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஆயிரமாயிரமாக அதிகரித்து வரும் வேளையில் கூடுதலாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணியில் சேராததால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
Also Read
-
கடல் ஆமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை... தமிழ்நாடு அரசின் புதுமுயற்சி - ஆமை விலக்கு சாதனங்கள் பற்றி தெரியுமா?
-
ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் T20 போட்டி - நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா இந்தியா ?
-
“தி.மு.க தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
ரூ.417 கோடியில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!