Tamilnadu
ஒரே நாளில் 3,645 பேருக்கு தொற்று... 46 பேர் பலி - தமிழகத்தில் அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 122 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதுவரை பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு 49, 960 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 37 பேர், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 3 பேர் மதுரையில் 2 பேர், விருதுநகரில் ஒருவர் என மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 32,305 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!