Tamilnadu
இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று - மிக அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை! #CoronaUpdates
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகஅதிக அளவில் காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,204 - ஆக இருந்தது. இந்நிலையில், இன்று மேலும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 97 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 92 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது.
Also Read
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !