Tamilnadu
“தமிழகத்தில் 30% அறிவில்லாத பெண்கள்” - ரஜினி சர்ச்சைப் பேச்சு!
நீண்ட காலமாக அரசியல் பிரவேசம் குறித்துப் பேசிவரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நிர்வாகிகளுடன் கூடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று நட்சத்திர விடுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ரஜினி “கட்சி வேறு; ஆட்சி வேறு. கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு வேறொரு தலைமையும் இருக்கவேண்டும். முதல்வராக என்னை நினைத்துப் பார்க்கவே முடியாது. சட்டப்பேரவையில் உட்கார்வது, பேசுவது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் ரத்தத்தில் அது வரவே இல்லை” எனப் பேசியுள்ளார்.
மேலும், “மொத்தமுள்ள 50% பெண்களில் 20 சதவீதத்தினருக்குத்தான் வாக்களிப்பது குறித்து சுயமாகச் சிந்திக்கத் தெரியும். 30 சதவீத பெண்கள் ‘யாருக்கு வாக்களிக்கவேண்டும்’ எனும் அறிவில்லாமல் இருக்கின்றனர்.“ எனப் பேசியுள்ளார் ரஜினி.
தமிழக பெண்கள் குறித்த ரஜினியின் நிலைப்பாடு அங்கிருந்த பத்திரிகையாளர்களையும், பெண்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தொடர்ந்து, மக்கள் விரோத கருத்துகளைப் பேசி வரும் ரஜினி, தனது அரசியல் பயணம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சைசை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!