Tamilnadu
“காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜ.க எம்.பி.,க்கள் செய்த அட்டகாசங்கள்”- பட்டியலிட்ட கே.எஸ்.அழகிரி!
அமைதியாகப் போராட்டம் நடத்துபவர்கள் மீதான கருத்துகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, “நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது முறையானது அல்ல. இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். எதிர்ப்புகளைத் தெரிவிக்கலாம் என்பதுதான் சிறப்பானதாகும்.
ஆனால் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை வெளியேற்றுவது என்பது பொறுமைபின்மைக்கு எடுத்துக்காட்டாகும். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் பா.ஜ.க செய்யாத அட்டகாசங்கள் கிடையாது. நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் விவாதத்தில் பேசும்போது பா.ஜ.க உறுப்பினர்கள் காகிதங்களைக் கிழித்தெறிந்தனர்.
அப்போது கூட பா.ஜ.க உறுப்பினர்களை வெளியேற்றவில்லை. அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் காங்கிரஸுக்கு இருந்தது. அந்தப் பக்குவம் இப்போது உள்ள மத்திய பா.ஜ.க அரசுக்கு இல்லாததற்கு வருத்தப்படுகிறேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பரிசீலிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு முறையும் வருவாய் துறை, காவல்துறையிடம் சென்று நிற்க முடியாது.
அவர்களுடைய பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்துகின்றனர். அந்த உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். வண்ணாரப்பேட்டையில் பெண்கள் யாருக்கும்இடையூறாக இல்லாமல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!