Tamilnadu
“பொண்ணு கொடுக்க யோசிக்குறாங்க ” : பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் உத்திரமேரூர் ஊராட்சி மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் ஊராட்சியில் உள்ள முகக்கேரி, ஆண்டிதங்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
கூலி வேலை செய்துவரும் பெரும்பாலான மக்கள் வாழும் இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 6 கி.மீ மேலாக நடந்து செல்ல வேண்டிய நிலையே உள்ளது. குழந்தைகள் தினமும் பள்ளிக்கு நடந்து செல்வதாவதாகவும், வேலைக்கு செல்வோறும் மிகுந்த சிரமங்களை சந்திப்பதாகவும் கூறுகின்றனர்.
பல நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லமுடியாத நிலையில், பள்ளி மதிய நேரத்தோடு முடிந்தால், சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தவாரு வீடு திரும்ப முடியாமலும் தவித்து வருகின்றனர். அதேப்போல் இரவு நேரங்களில் வேலைக்குச் சென்று வரும் பெண்களும் தினமும் சிரமப்பட்டு ஊர் திரும்புகின்றனர்.
அவசரத்தில் வெளியூரோ மருத்துவமனையோ செல்லவேண்டும் என்றால் சிறியவர்களும் முதியவர்களும் நடந்தேதான் செல்வதாகவும், எங்கள் ஊர் இளைஞருக்கு ஊராட்சி பெயரைக் கேட்டதுமே பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி பல முறை பேருந்துவசதி கேட்டு மனு கொடுத்தும் எந்த பயனுமில்லை. ஓட்டுக்காக வந்த அமைச்சர் அதுக்கு பிறகு வரவே இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!