Tamilnadu
“வேறொரு நடிகையுடன் சேர்ந்துகொண்டு என்னைக் கொடுமைப்படுத்துகிறார்” - சின்னத்திரை நடிகை பரபரப்பு புகார்!
தொலைகாட்சித் தொடர்களில் நடித்து அதன்மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ. இவரும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வரும் காதலித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ நேற்று முன்தினம் (அக்.1) அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் ஈஸ்வரும் அவரது தாயாரும் சேர்ந்து தன்னைக் கொடுமைப் படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈஸ்வர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை மகாலட்சுமி என்பவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனது நகைகள் மற்றும் பணத்தை ஈஸ்வர் அபகரித்துக் கொண்டதாகவும், குழந்தையுடன் தான் தவித்து வருவதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.
ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், ஈஸ்வர் மற்றும் அவரது தாய் சந்திரா ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருவதாக சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மீண்டும் புகார் அளித்துள்ளார்.
அதில், ஈஸ்வர் திருமணத்திற்குப் பிறகு குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களிலும், சூதாட்டத்திலும் அதிகமாக ஈடுபட்டதாகவும், தொடர்ந்து குடிபோதையில் தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாகவும், தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், நடிகை மகாலட்சுமி தூண்டுதலின் பேரில் தான் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
Also Read
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!