Tamilnadu
இருக்கும் இடத்திலிருந்தே கைரேகை மூலம் வாக்களிக்கும் இயந்திரம்:அரசுப்பள்ளி மாணவர்களை கௌரவிக்கும் ஜனாதிபதி!
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான சுதர்ஷன், விஷால், சுஷில் ஆகிய மூவரும், நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தை கடந்த ஆண்டு வடிவமைத்தனர்.
இந்த நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி, வாக்காளர் இருக்கும் இடத்தில் இருந்து தனது தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். அதற்கு ஆதார் எண்ணும், வாக்களரின் கைரேகையை மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த இயந்திரத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் தேர்தலில் கள்ள ஓட்டுப் போடுவது தடுக்கப்படும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நவீன இயந்திரத்தை கண்டுபிடித்த இந்த மூன்று மாணவர்களும் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக தேர்வாகியுள்ளனர்.
அப்போது, தாங்கள் வடிவமைத்த நவீன வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை குடியரசுத் தலைவரிடம் விளக்கிக் கூறவுள்ளனர். மேலும், இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருப்பதால் சென்னை அரசுப்பள்ளி மாணவர்களை குடியரசுத் தலைவர் கௌரவிக்கவுள்ளார். இதற்கிடையே, தமிழக பள்ளிக்கல்வி இயக்குநரையும் சந்தித்து மாணவர்கள் வாழ்த்துப் பெற்றனர்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!