Tamilnadu
’ரயில் நிலையங்களில் உள்ள விளம்பர பலகைகளை நீக்குங்கள்’ : அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்
ரயில்களில் சுவரொட்டி ஒட்டுவது, விளம்பர பலகைகளை வைப்பது போன்ற செயல்கள் மக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. எனவே ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டதோ, விளம்பரம் செய்யவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரபாகரன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் தாரணி அமர்வு, இனி தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான எந்த இடங்களிலும் ப்ளக்ஸ் பேனரோ, சுவரொட்டிகளோ ஒட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது.
அவ்வாறு வழங்கினால் நோட்டீஸ் பேனர் வைத்தவர்கள் மற்றும் அதற்கு சொந்தமானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும், தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான இடங்களில், ரயில்களில் ஏற்கெனவே உள்ள விளம்பர பலகைகள், நோட்டீஸ்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூன்று வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!