Tamilnadu
மணப்பாறையில் மழைக்கு வாய்ப்பு? சுர்ஜித்தை மீட்கும் பணி என்னவாகும்? - வானிலை மையம் தகவல்!
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை குமரிக்கடல் பகுதியில் நகர்ந்து வலுப்பெறும். ஆகையால் அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு பகுதியிலும், வட தமிழகத்தில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் அக்.,30, 31ம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.
இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கேரளா, தென் தமிழக கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் வருகிற 29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், திருச்சி மணப்பாறையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யக்கூடும் என ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read
-
தீபாவளி போனஸ் : கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அறிவித்த தமிழ்நாடு அரசு!
-
“தகுதியான மகளிருக்கு டிச.15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!” : துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்!” : இலங்கை பிரதமரின் இந்திய வருகையையொட்டி முதல்வர் கடிதம்!
-
“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !