Tamilnadu
மணப்பாறையில் மழைக்கு வாய்ப்பு? சுர்ஜித்தை மீட்கும் பணி என்னவாகும்? - வானிலை மையம் தகவல்!
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை குமரிக்கடல் பகுதியில் நகர்ந்து வலுப்பெறும். ஆகையால் அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு பகுதியிலும், வட தமிழகத்தில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் அக்.,30, 31ம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.
இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கேரளா, தென் தமிழக கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் வருகிற 29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், திருச்சி மணப்பாறையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யக்கூடும் என ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !