Tamilnadu
பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்ததால் மட்டும் தமிழராகிவிட முடியுமா? திருநாவுக்கரசர் எம்.பி கேள்வி!
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேசியது தொடர்பாக நெட்டிசன்கள் முதற்கொண்டு அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பேட்டியளித்திருந்த திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், தமிழர் மரபு படி சீன அதிபருடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்திருந்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதாவது, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து வலம் வந்ததால் மட்டும் தமிழராகிவிட முடியுமா? இது போன்று வேட்டி, சட்டை அணிவதால் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது?
வெளிநாட்டினர் வந்து செல்வதால் நட்சத்திர ஓட்டலுக்கு அருகே இருக்கும் கடற்கரை எப்போதுமே சுத்தமாகதான் இருக்கும். ஆனால் இப்படி குப்பைகளை எடுத்து விளம்பரம் தேடுகிறார் பிரதமர் மோடி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை இப்படியெல்லாம் வேஷமிட்டு மக்களை திசைத் திருப்புவதன் முயற்சியாகவே கருதப்படுகிறது. ஆனால் இது போன்ற செயல்பாடுகள் எதுவும் தமிழகத்தில் எடுபடாது. மேலும், மோடி வேட்டி சட்டை அணிந்துள்ளதால் வேலை வாய்ப்பும், தொழில் வளமும் பெருகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார் திருநாவுக்கரசர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!