Tamilnadu
பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்ததால் மட்டும் தமிழராகிவிட முடியுமா? திருநாவுக்கரசர் எம்.பி கேள்வி!
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேசியது தொடர்பாக நெட்டிசன்கள் முதற்கொண்டு அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பேட்டியளித்திருந்த திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், தமிழர் மரபு படி சீன அதிபருடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்திருந்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதாவது, மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து வலம் வந்ததால் மட்டும் தமிழராகிவிட முடியுமா? இது போன்று வேட்டி, சட்டை அணிவதால் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது?
வெளிநாட்டினர் வந்து செல்வதால் நட்சத்திர ஓட்டலுக்கு அருகே இருக்கும் கடற்கரை எப்போதுமே சுத்தமாகதான் இருக்கும். ஆனால் இப்படி குப்பைகளை எடுத்து விளம்பரம் தேடுகிறார் பிரதமர் மோடி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை இப்படியெல்லாம் வேஷமிட்டு மக்களை திசைத் திருப்புவதன் முயற்சியாகவே கருதப்படுகிறது. ஆனால் இது போன்ற செயல்பாடுகள் எதுவும் தமிழகத்தில் எடுபடாது. மேலும், மோடி வேட்டி சட்டை அணிந்துள்ளதால் வேலை வாய்ப்பும், தொழில் வளமும் பெருகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார் திருநாவுக்கரசர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!