Tamilnadu
“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பல லட்சம் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்” : வணிகர் சங்கத்தினர் கவலை!
“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினால் 12 மாவட்டங்களிலுள்ள சுமார் 9,000 கடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.
இது தொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மனு அளித்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்துப் பேசிய ஏ.எம்.விக்கிரமராஜா, “வணிகர் வாரியம் முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. நல அமைப்பை சீரமைக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் தடை சட்டத்தில் உள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், பேனர்களை தடை செய்தால் பல லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு உரிய தீர்வு காண வலியுறுத்தியிருக்கிறோம். சிரமத்தைக் குறைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும்.
முழுமையாக பேனர்களை தடை செய்தால் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!