Tamilnadu
இனி மேல் வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் கட்டணம் - வியப்பில் ஆழ்த்தும் ம.தி.மு.க அறிக்கை !
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாயை நிதி வழங்க வேண்டும் என ம.தி.மு.க அறிவித்துள்ளது.
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தொடர்ந்து இயங்கி வருபவர் வைகோ. அரசியலில் பதவிகள் ஏதும் வகிக்காத காலங்களிலுமே, தொடர்ந்து மக்கள் நல போராட்டங்களில் பங்காற்றியவர் வைகோ. பேரணி, நடைபயணம், ஆர்ப்பாட்டம் என களத்தில் இறங்கியும், சட்டத்தின் மூலமும் இன்றளவும் போராடி வருபவர் வைகோ.
இது போன்ற போராட்டக்களங்களில் வைகோ பங்கெடுக்கும்போது, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதைக் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் விரும்புவதுண்டு. வைகோவும் எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக அவர்களுக்கு போஸ் கொடுத்துச் செல்வார். இது போன்ற செல்ஃபிக்கள் ஒரு அரசியல் தலைவருக்கு மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை உடைக்கிறது.
சமீபத்தில் ம.தி.மு.க. முக்கிய அறிவிப்புகளுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தான் இந்த செல்ஃபி குறித்த அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. அதில், இனி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி, புகைப்படம் எடுக்க விரும்புவோர், தலா 100 ரூபாய் நிதியாக கட்சிக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், தொண்டர்கள் யாரும் இனி சால்வை அணிவிக்கக் கூடாது என்றும் சால்வைக்கான தொகையை கட்சி நிதிக்கு கொடுக்க சொல்லியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ம.தி.மு.கவின் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் வைகோவுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் வழங்க வேண்டுமா என்பது குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !