Tamilnadu
வேலூர் தேர்தல் தடைக்கு தி.மு.க. காரணம் அல்ல - துரைமுருகன் பேட்டி
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது அ .தி.மு.க.,வின் முறைகேட்டினால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து, வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க பொருளாளர் துரைமுருகன், “வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல. வருமான வரித்துறையினருக்கும் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
எங்களுக்கு சொந்தமான வீடு, கல்லூரிகளில் சோதனை செய்துவிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று எழுதி கொடுத்துதான் சென்றுள்ளனர்” என்று கூறினார்.
மேலும், “தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்காலிக ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும் என்ற அவர், சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல் போன்றவற்றை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவோம்” எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !