Tamilnadu
10% இட ஒதுக்கீடு : தி.மு.க கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் விவகாரம் பற்றிப் பேச நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கு எதிரான இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்ததோடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில், 69% இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை உயர்த்திக்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள கவர்ச்சியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது என அவர் தெரிவிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்கள்.
அதன்படி, முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் பற்றிப் பேச நாளை மறுநாள் (08/07/2019) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
Also Read
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!