Tamilnadu
தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் பல ஆயிரம் கோடிக்கு வணிகம் பாதிப்பு - விக்கிரமராஜா !
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், '' சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், சென்னை மக்களுக்கு ஆறு மாதத்திற்கு தண்ணீர் கட்டணத்தை அரசு வசூலிக்ககூடாது. பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் கிடைத்த பின்பு தான் அதற்கான தடையை விதிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி கடைகளின் வாடைகைகளை குறைக்க வேண்டும். வணிகர்களுக்கு அரசு அதிகாரிகள் பல்வேறு வகையில் கொடுக்கும் நெருக்கடிகளை கண்டித்தும், வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு, வணிகர்களுக்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் '' என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!