Tamilnadu
"ஒரே மொழி, ஒரே நாடு" என்னும் RSS கொள்கையை பா.ஜ.க புகுத்த நினைக்கிறது: கே.எஸ்.அழகிரி சாடல்!
மத்திய பா.ஜ.க அரசின் புதிய கல்விக்கொள்கையில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "தமிழக அரசு தற்பொழுது உள்ள மொழிக்கொள்கையில் தெளிவற்றத் தன்மையில் உள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ், ஆங்கிலம் அதனை அடுத்து நீங்கள் விருப்பப்படுகிற ஒரு மொழியை படிக்கலாம் என்பது ஒருவகையில் மொழி திணிப்புதான்.
விருப்பம் உள்ள மொழியை தேர்வு செய்யலாம் என்பது வார்த்தை நன்றாக இருக்கும். ஆனால் கட்டாயமாக ஒரு மொழியை படிக்க வேண்டும் என நிர்பந்திப்பது திணிப்பைதான் ஏற்படுத்தும். ஏற்கனவே மாணவர்கள் இரண்டு மொழியை தான் படிக்கின்றனர். இன்னும் மேற்கொண்டு மூன்றாவதாக ஒரு மொழி என்றால் மேலும் சிரமத்தை தான் ஏற்படுத்தும் ஆகவே அதனை செய்யக்கூடாது.
ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்பது தான் ஆர்.எஸ்.எஸ்.கொள்கையாக உள்ளது. அந்தக் கொள்கையைத் தான் பா.ஜ.க புகுத்த நினைக்கிறது. அதுதான் அவர்கள் நோக்கம் கூட. தென் மாநிலங்களின் படுதோல்வியை சகித்துக் கொள்ளாமல் பா.ஜ.க, இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்துக்கொண்டு அதை தீவிரமாக அமல்படுத்த துடிக்கிறது.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!