Tamilnadu
43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவு !
நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குப்பதிவின் போது 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்தது. இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் அடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார். எனவே, இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்தார்.இதையடுத்து, தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மறுவாக்குப்பதிவு நடக்கவிருக்கும் 3 வாக்குச்சாவடிகள் தவிர, இதர 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைசீட்டுகளை எண்ணிக் கணக்கிடுமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ, 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது; வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் ஒப்புகைச் சீட்டை எண்ணும்போது தெரிந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒப்புகைச்சீட்டு எண்ணும்போது சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும் என்றும், 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகள் அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், மாதிரி வாக்குகளை அழிக்காததால் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!