Tamilnadu
“தேர்தல் கமிஷன் வியாபாரிகளிடம் கைப்பற்றிய பணத்தை திருப்பித்தரவேண்டும்” - விக்கிரமராஜா
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தபோது தேர்தல் ஆணையம் வியாபாரிகளிடம் கைப்பற்றிய பணத்தை நிபந்தனைகள் இன்றி திருப்பி அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல இடங்களில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதை ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தாலும், நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், வியாபாரிகளின் பணம், பொருட்களைக் கைப்பற்றும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டது.
இதுபோலவே வருகிற 4 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் செயல்பட்டால், மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் தின மாநாட்டிற்குப் பிறகு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
வருகின்ற அரசு கடந்த அரசைப் போன்று செயல்படாமல், வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார் விக்கிரமராஜா.
Also Read
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!