Tamilnadu
“தேர்தல் கமிஷன் வியாபாரிகளிடம் கைப்பற்றிய பணத்தை திருப்பித்தரவேண்டும்” - விக்கிரமராஜா
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தபோது தேர்தல் ஆணையம் வியாபாரிகளிடம் கைப்பற்றிய பணத்தை நிபந்தனைகள் இன்றி திருப்பி அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல இடங்களில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதை ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தாலும், நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், வியாபாரிகளின் பணம், பொருட்களைக் கைப்பற்றும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டது.
இதுபோலவே வருகிற 4 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் செயல்பட்டால், மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் தின மாநாட்டிற்குப் பிறகு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
வருகின்ற அரசு கடந்த அரசைப் போன்று செயல்படாமல், வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார் விக்கிரமராஜா.
Also Read
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!