Sports
"தோனியை பார்த்தாலே ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள், இது உத்வேகமளிக்கிறது" - CSK வீரர் நெகிழ்ச்சி !
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில், தோனி எப்போதெல்லாம் ஆடுகளத்திற்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர் என்று நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "தோனியின் மீது மக்கள் அதீத அன்பை வெளிப்படுத்துகின்றனர். அவர் எப்போதெல்லாம் ஆடுகளத்திற்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். அதைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது.
தோனிக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவைப் போல இதற்கு முன்னர் பார்த்ததில்லை. இதனை பார்க்கும்போதே தோனி என்ன சாதித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. மக்களிடம் அவர் கொண்டிருக்கும் செல்வாக்கு உண்மையிலேயே எனக்கு உத்வேகம் அளிக்கிறது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!