Sports
அபாயகரமாக திகழ்ந்த மைதானம்.. 6.5 ஓவர்களில் முடித்துக்கொள்ளப்பட்ட ஆட்டம்- முக்கிய போட்டியில் நடந்தது என்ன?
ஐபிஎல் பணியில் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்டு அங்கு அது வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த சூழலை 2023-2024ஆம் ஆண்டுக்கான பிக்பாஷ் லீக் டி20 தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று மெல்போர்ன் ஜீலாங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால், முதல் ஓவரில் இருந்தே பந்துகள் சீரற்ற வேகத்தில் பௌன்ஸ் ஆகியது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறிணர். தொடக்க வீரர் ஸ்டீபன் எஸ்கினாசி இரண்டாவது பந்திலேயே ரன் கணக்கை தொடங்காமல் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரரான கூப்பர் கன்னோலியும் 6 ரன்னில் வெளியேறினார். இந்த மைதானத்தில் நல்ல லெந்தில் வீசப்பட்ட பந்து கூட பேட்ஸ்மேன் தலைக்கு நேராக சீறியது. சில பந்துகள் விக்கெட் கீப்பரையும் தாண்டி பௌன்ஸ் ஆகின.
இதன் காரணமாக 6.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மோசமான ஆடுகளம் காரணமாக இந்த ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் வெறுப்படைந்த ரசிகர்கள் மைதானத்திலே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பல்வேறு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் இந்த மைதானத்தின் தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!