Sports
”இந்த IPL சீசனின் மிக மோசமான அணி இதுதான்”.. ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ள அணி எது?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். இந்நிலையில் இந்தாண்டுக்காக ஐபிஎல் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. இதில் குஜராத் அணியுடன் சென்னை அணி படுதோல்வியடைந்தது. தற்போது வரை 10 அணிகளும் இரண்டு போட்டிகளை விளையாடியுள்ளனர்.
இதில் லக்னோ, குஜராத், பஞ்சாப் அணிகள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டத்தைச் முன்னாள் சி.எஸ்.கே வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து யூ டியூப் சேனலில் பேசிய ஹர்பஜன் சிங், "சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியால் 170-190 ஸ்கோர் எடுக்கக்கூடிய பேட்டிங் யூனிட் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இந்த அணியில் மார்க்ராம் ரன்களை அடிக்கவில்லை என்றால் அவ்வளவுதான். திரிபாதி ஒரு திறமையான வீரர். அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் இந்த சீசனில் இதுவரை அவர் பேட்டிங் வெளிப்படவில்லை. இனி வரும் போட்டியிலாவது ரன்களை அடிக்கிறாரா என்று பார்க்கலாம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!
-
உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை தேவை! : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
S.I.R - மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க : தேர்தல் ஆணையம் என்ன 'சிட்டி ரோபா'வா - முரசொலி தாக்கு!