Sports
”அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை அல்ல.. அதையும் தாண்டியது” -தடுக்க தடுக்க அஸ்வினை புகழ்ந்த ஜடேஜா !
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்கவைத்தது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது
பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரில் தோல்வியின்பிடியில் இருந்து மீண்டு இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது.மூன்றே நாளில் முடிந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அதன் பின்னர் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி175/2 என்ற நிலையில் இருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்துகொள்ளப்பட்டது.
இதனால் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா கைப்பற்றி புதிய வரலாறும் படைத்துள்ளது. இந்த தொடரில் 25 விக்கெட்டுகள் மற்றும் 86 ரன்கள் விளாசிய அஸ்வின் , 135 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆகியோர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பின்னர் பேசிய ஜடேஜா ” அஸ்வினுடன் இத்தனை ஆண்டு காலம் இணைந்து பந்து வீசுவது மிகவும் மகிழ்ச்சி. ஒவ்வொரு முறை நான் திணறும்போதும் இக்கட்டான சூழலில் இருக்கும் போதும் எப்படி பீல்டிங் நிறுத்த வேண்டும், எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்.
அவருக்கு இருப்பது கிரிக்கெட் மூளை மட்டுமல்ல, அதையும் தாண்டியது. கிரிக்கெட் தாண்டி பலவற்றை பேசுவார். எங்களுக்கு பெயரே தெரியாத அணியை பற்றி எல்லாம் பேசுவார். உலகில் நடந்த அனைத்து கிரிக்கெட் சீரிஸ் பற்றியும் இவருக்கு தெரியும். கிரிக்கெட் மட்டுமல்ல அனைத்தையும் பற்றி தெரிந்து வைத்திருப்பார்” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!