Sports
#T20worldcup இந்திய அணியை மிரட்டி பார்த்த லிட்டன் தாஸ் : விடாமல் கடைசி வரை போராடிய வங்கதேச அணி !
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுல் அதிரடியாக 50 ரன்கள் அடித்தார். அதேபோல் வீராட் கோலியும் 64 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வலுசேர்த்தார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடுத்தது.
பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச துவக்க வீரர்கள் சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் சேர்ந்து அதிரடிகாட்டினர். 7 ஓவர் வரை விக்கெட் கொடுக்காமல் 66 ரன்களை சேர்த்திருந்தனர். மேலும் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட அனைவரது ஓவர்களிலும் பவுண்டரிகளாக பறக்கவிட்டார்.
இவரின் இந்த ஆட்டத்தைப்பார்த்த இந்திய அணி ரசிகர்கள் களக்கம் அடைந்தனர். மேலும் வங்கதேச அணி 54 ரன்கள் அடித்திருந்தபோது 21 பந்தில் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு தோல்வி பயம் காட்டினார். இப்படியே சென்றால் நீச்சம் வங்கதேச அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் பேசும் அளவிற்கு லிட்டன் தாஸ் அதிரடி ஆட்டம் இருந்தது.
அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டு 4 ஓவர்கள் குறைக்கப்பட்டது. மேலும் 85 ரன்கள் வங்கதேச அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
லிட்டன் தான் இன்னும் களத்தில் இருப்பதால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம் என வங்கதேச ரசிகர்கள் நினைத்திருந்தபோது திடீரென லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆனார். அவர் 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசிவரை வங்தேச அணி போராடிய 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!