Sports
"அவர் நீண்ட காலமாக தன்னை டெஸ்ட் போட்டிகளில் தொலைந்துவிட்டார்"- இளம்வீரரை குறிப்பிட்டு பேசிய ஹெய்டன் !
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பொசிஷனுக்கு தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய அணி இருவரையும் மாறி மாறி பயன்படுத்தியது. அதனால், இருவருக்குமே போதுமான போட்டிகள் கிடைக்கவில்லை. அவர்கள் இருவருமே டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்திய அணி தினேஷ் கார்த்திக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவே தெரிகிறது. அதற்கு காரணம் சமீப காலமாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் ரிஷப் பண்ட் சொதப்பி வருகிறார். இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன் பேசியுள்ளார். தனியார் ஊடகத்துக்கு பேசிய அவர், "டி20 உலகக் கோப்பைக்கு ரிஷப் பண்ட்டை அணியில் நிச்சயம் வைத்திருக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் ஒரு அற்புதமான வீரர். ஆனால் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ஒரு பெரிய மைதானம், அங்கு பந்தை மைதானத்தை விட்டு தொலைதூரத்திற்கு அடிக்கக்கூடிய வீரர் இருக்க வேண்டும்.
மைதானத்தில் குறிப்பாக விக்கெட்டின் பக்கங்களை கடந்து வெளியே அடிக்க குறைந்தபட்சம் 3-4 பவர் ஹிட்டிங்க் வீரர்களை அணியில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, அந்த பன்முகத்தன்மை ரிஷப்பிற்கு உள்ளது. அவர் இன்னும் கட்டுப்பாடாக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன், அவர் நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் தொலைந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“எந்த டெல்லி அணியுடைய காவி திட்டமும் தமிழ்நாட்டில் பலிக்காது!” : சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்! : முதலமைச்சர் மேற்பார்வையில் ‘ஒரு மணி நேரத்திற்குள் பயன்’ பெற்ற மக்கள்!
-
5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடும் யோகி ஆதித்யநாத் அரசு : பெற்றோர்கள் கண்டனம் - மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
-
845 அரசு காலிப் பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு! : எப்போது விண்ணப்பிக்கலாம்?
-
அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!