Sports
மைதானத்தில் நுழைந்த போராட்டகாரர்கள்.. ஸ்தம்பித்து நின்ற ஆஸ்திரேலிய - இலங்கை வீரர்கள் : நடந்தது என்ன?
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி பதிலடி கொடுத்தது.
அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித், 145 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணி தற்போதைய நிலையில் 160 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.
இந்த போட்டியின்போது, இலங்கையில் அதிபருக்கு எதிராக நடந்த போராட்டம், மைதானத்திலும் எதிரொலித்தது. போட்டி நடக்கும் காலே மைதானத்தை சுற்றி போராட்டக்காரர்கள் அணிவகுத்து நிலையில், அவர்கள் மைதானத்திலும் புகுந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் போட்டிக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !