Sports
40 ரூபாய்க்கு சிகிச்சை பெறும் எம்.எஸ்.தோனி.. வெளிவந்த தகவலால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தற்போது இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த ஓய்வு காலத்தை வீட்டில் தோட்டம் வைத்தும் அதில் விளையும் காய் கறிகளை விற்பனை செய்தும் வருகிறார்.
தோனி சமீப காலமாக மூட்டுவலி பிரச்சனையாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், இதற்காக தனது இல்லத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான லாபுங் என்ற கிராமப் பகுதியில் அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.
அந்த கிராமத்தில் இருக்கும் வந்தன் சிங் கேர்வார் என்ற ஆயுர்வேத மருத்துவர் அந்த பகுதியில் பிரபலமானவர். தோனியின் பெற்றோரும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று நல்ல பலனை கண்டுள்ளனர். இதன் காரணமாக தோனியும் இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.
நான்கு நாள்களுக்கு ஒரு முறை இந்த மருத்துவரிடம் தோனி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆலோசனை கட்டணமாக ரூ.20, மருந்துகளுக்கு ரூ.20 என மொத்தம் ரூ.40 மட்டுமே தோனியுடன் வாங்குவதாக மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் இருக்கும் இடத்துக்கு தேவையின்றி கூட்டம் வரக்கூடாது என்பதற்கான இந்த சிகிச்சை தோனியின் காரிலே நடைபெறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 40 ரூபாய்க்கு சிகிச்சை பெரும் தோனியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!