Sports
”என்னை மிரட்டினாங்க..” : சாஹலை அடுத்து உத்தப்பாவும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் ராபின் உத்தப்பா. இவர் இதுவரை ஐ.பி.எல் தொடர்களில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து அணிகள் மாறுவதற்கான காரணம் குறித்து கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் ராபின் உத்தப்பா.
அதில், "2008ல் மும்பை அணிக்காகத்தான் நான் முதலில் விளையாடினேன். பிறகு அடுத்த தொடரில் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களில் நானும் ஒருவன். அப்போது எனக்கு இது மிகவும் கடினமாக இருந்தது.
என்னை அணியில் இருந்து மாற்றுவதற்கான கடிதத்தில் மும்பை அணியின் நிர்வாகத்தினர் கையெழுத்தி வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்து இட மறுத்தேன். அப்போது அவர்கள் உங்களுக்கு மும்பை அணியில் இனி விளையாட வாய்ப்பு கொடுக்க முடியாது. நீங்கள் வேறு அணிக்கு மாறலாம் என பகிரங்கமாகவே கூறினர்.
பிறகு அடுத்த தொடரில் RCB அணிக்காக விளையாடினேன். அந்த தொடரில் நான் மன அழுத்தத்தில் இருந்ததால் சிறப்பான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யுஷ்வேந்திர சாஹல் மும்பை அணி வீரர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், சென்னை வீரர் ராபின் உத்தப்பாவும் மும்பை அணியின் நிர்வாகத்தின் மீது புகார் வைத்துள்ளது கிரிக்கெட் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!