Sports
பதக்க வாய்ப்பு பிரகாசம்: ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் சவுரவ் முதலிடம்!
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவருக்கான துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் 586 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியா வீரர் சவுரவ் சவுத்ரி.
டோக்கியோவில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் 586 புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதே போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 575 புள்ளிகளுடன் 17 வது இடம் பிடித்து வெளியேறினார்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி போட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு துவங்க உள்ள நிலையில்,19 வயதான சௌரப் சவுத்ரி இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை இன்று வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
19 வயதான சௌரப் சவுத்ரி ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று எதிரிகள் புலம்புகிறார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!