Sports
பதக்க வாய்ப்பு பிரகாசம்: ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் சவுரவ் முதலிடம்!
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவருக்கான துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் 586 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியா வீரர் சவுரவ் சவுத்ரி.
டோக்கியோவில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் 586 புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதே போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 575 புள்ளிகளுடன் 17 வது இடம் பிடித்து வெளியேறினார்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி போட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு துவங்க உள்ள நிலையில்,19 வயதான சௌரப் சவுத்ரி இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை இன்று வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
19 வயதான சௌரப் சவுத்ரி ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!