Sports
பதக்க வாய்ப்பு பிரகாசம்: ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் சவுரவ் முதலிடம்!
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவருக்கான துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் 586 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியா வீரர் சவுரவ் சவுத்ரி.
டோக்கியோவில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் 586 புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதே போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 575 புள்ளிகளுடன் 17 வது இடம் பிடித்து வெளியேறினார்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி போட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு துவங்க உள்ள நிலையில்,19 வயதான சௌரப் சவுத்ரி இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை இன்று வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
19 வயதான சௌரப் சவுத்ரி ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!