Sports
‘அணிக்கு எது தேவையோ அதையே செய்தோம்’ : ரோகித் நீக்கப்பட்டது குறித்து கோலியின் விளக்கத்தால் சர்ச்சை !
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இன்டீஸ் 222 ரன்களும் எடுத்திருந்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 419 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணியை துரத்தியது. இந்திய அணி வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் வெறும் நூறே ரன்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை சுருட்டியது.
இதனையடுத்து 318 ரன்கள் வித்தியாசத்தில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி அபாரமான வெற்றியை பெற்று சாதனையும் படைத்தது.
இதற்கிடையில், இந்த டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ததில் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. குறிப்பாக ரோகித் சர்மாவை ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கியது கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது.
ரோகித் சர்மாவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான கங்குலி, அசாருதீன், சேவாக், சோயிப் அக்தர் என பலர் அதிருப்தி தெரிவித்தும், அவரை அணியில் சேர்க்காததற்கு கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விளக்கமளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அணியை ஒன்று சேர்ப்பது மிகப்பெரிய விஷயம். அனுமன் விஹார் சிறந்த பந்து வீச்சாளர் என்பதாலேயே அவரை அணியில் சேர்த்தோம்.
இது முற்றிலும் கலந்தாலோசிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் எடுக்கப்பட்ட முடிவு. அணியின் நலனுக்காக எது முக்கியமோ அதை செய்திருக்கிறோம் என பேசியுள்ளார்.
கோலியின் இந்த பேச்சுக்கும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ரோகித்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில் எல்லாம் செய்துவிட்டு சுலபமாக அணியை கை காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் : அறிமுக விழாவில் முதலமைச்சர்!
-
“கலைஞரை ரோல்மாடலாக எடுத்து செயல்பட வேண்டும்” : மாற்றுத்திறனாளிகள் விழாவில் முதலமைச்சர் பேச்சு !
-
ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ஏன் எதிர்க்க வேண்டும்? - முழுவிவரம்!
-
“அது ‘மக்கள் பவன்’ அல்ல; மக்கள் ‘விரோத’ இல்லம்!” - ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!